April 26, 2024

போட்டியாளர்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்த பூர்ணிமா ..!! 16 லட்சம் பணப்பெட்டியை வாங்கி ..!! புத்திசாலி என்று நிரூபித்த பூர்ணிமா ..!!

பூர்ணிமா ரவி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் யூடியூப் பிரபலம் ஆவார்.  ஆரம்பத்தில் ஆராத்தி என்ற பெயரில் ரசிகர்களிடையே  பெரிய அளவில் பிரபலமானார் பூர்ணிமா.  பின்னர் தமிழில் வெளியான பிளான் பண்ணி பண்ணனும், சோட்டா ,அன்னபூரணி போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார். இதை அடுத்து தற்போது செவப்பி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார் பூர்ணிமா . மேலும் ஆரம்பத்தில் இருந்தே மாயாவுடன் சேர்ந்து இவர் அடித்த அலப்பறையை யாராலும் மறந்து இருக்க முடியாது . அது மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களை இவர்கள் சங்கடப்படுத்தியதும் ,

அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இப்படி இருக்கும் நிலையில் ஒவ்வொரு சீசனிலும் பணப்பெட்டி டாஸ்க் வரும்.  அப்படி இந்த முறை யார் அந்த பதினாறு லட்சத்தை எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி இருந்தது . அதுவரை தான் ஒரு முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்த,

பூர்ணிமா புத்திசாலித்தனமாக அந்த 16 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டார்.  மேலும் இந்த வார நாமினேஷனில்  பூர்ணிமா பெயர் இருந்தது . இதனால் சாமர்த்தியமாக முடிவு செய்து அந்த 16 லட்சத்தை எடுத்து வெளியேறி விட்டார் பூர்ணிமா.  அப்படி வெளியேறியது,

மட்டுமல்லாமல், இதுவரை நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று போட்டியாளர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு சென்றுள்ளார் பூர்ணிமா . தற்போது பூர்ணிமாவின் முடிவு சரியான முடிவு தான் என்று பலரும் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *