April 26, 2024

சிங் கம் போ ல இருந் த மனி தரை கோமா ளியா க்கியது இ வரா ..?? கூட இரு ந்தே குழிப றித்த சோ க ம் ..!! இ த னா ல் தான் விஜய காந் த் இப் படி ஆகி விட் டாரா ..??

அன்று முதல் இன்று வரை கேப்டன் விஜயகாந்துக்கு  ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.  அதுவும் அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக கொடிக்கட்டி பறந்து வந்த ரஜினி கமலுக்கு  ஒரு போட்டியாக இருந்து வந்தார் விஜயகாந்த்.  இப்படி முன்னணி நடிகர்களுக்கே டாப் கொடுத்து வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் கோமாளி என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார் . அந்த வகையில் அப்போது விஜயகாந்த் க்கு,

உறுதுணையாக நின்றவர் தான் அவருடைய நண்பரான ராவுத்தர் . இவர்தான் விஜயகாந்தின் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனித்துக் கொள்வாராம்.  அப்படி இவர் இருக்கும் வரை நல்ல நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்தார் விஜயகாந்த் . இதன் பிறகு தயாரிப்பாளர் ஒருவர் ,

விஜயகாந்த் க்கு சம்பள பாக்கி தரவில்லையாம்.  அதை ராவுத்தர்  கேட்டது தான் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  அது என்னவென்றால் அந்த தயாரிப்பாளர் விஜயகாந்தின் மனைவியிடம் எதையோ சொல்லி இவர்களின் நட்பில் விரிசல் அடைய வைத்திருக்கிறார்.  இதன்பிறகு விஜயகாந்தின்,

சினிமா வேலைகளை தன்னுடைய சகோதரரை பார்த்துக் கொள்ளும்படி கூறினாராம் பிரேமலதா.  ஆனால் அதன் பிறகு தான் விஜயகாந்தின் படங்களில் நம்ப முடியாத காட்சிகளும் , கோமாளித்தனமான வசனங்களும் இடம் பெற்றதாம் . அதுவும் ஒரு கட்டத்தில் விஜயகாந்தின் ரசிகர்களே கலாய்க்கும் அளவிற்கு ,

விஜயகாந்த் மொக்கை படங்களில் நடித்து வந்தார் இருந்தாலும் தன்னுடைய நண்பனை பிரிந்த விஜயகாந்த் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளானதாகவும்,அவரின் நண்பரின் மரணத்தை தாங்க முடியாமல் தான் விஜயகாந்த் இப்படி ஆனதாகவும்  கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *