May 7, 2024

கேப்டனின் இறப்பிற்கு வராமல் ..!! இப்ப வந்து நீலி கண்ணீர் வடிக்கும் கார்த்தி ..!! என்னா நடிப்புடா சாமி ..!! வைரலாகும் வீடியோ ..!!

கடந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திடீர் மரணம் ரசிகர்களையும் திரைப்பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.  மேலும் பல வருடங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இறந்ததாக தகவல் வெளியானது.  இவருடைய மரண செய்தியை கேட்டு தமிழ் சினிமாவை சேர்ந்த ரஜினி ,கமல் ,விஜய் போன்ற பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள் .

ஆனால் பாதி தமிழ் நடிகர்கள் இந்தப் பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை . மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது எல்லா நடிகர்களுக்கும் பல உதவிகளை செய்து இருக்கிறார் . அப்படி இருந்தும் கேப்டன் இறப்பின் போது நடிகர் சங்கம் பெரிய அளவில்,

எதையும் செய்யாதது பெரும் சர்ச்சைக்கும் ஆளாகியுள்ளது . இன்னும் சொல்லப்போனால் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் விஷால் , கார்த்தி போன்ற நடிகர்கள் வெளிநாட்டில் இருந்து இரங்கலை தெரிவித்து இருந்தார்கள் . இதை அடுத்து வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பிய,

கார்த்தி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார் . அப்போது பேசிய கார்த்தி,  கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை . அவருடைய இறுதி ஊர்வலத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

அப்படி அவருக்கு என்னால் மரியாதை செலுத்த முடியவில்லை என்பது என்னுடைய வாழ்நாள் முழுக்க ஒரு மிகப்பெரிய குறையாகவே இருக்கும் என்று கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம் எல்லாம் சிறப்பாக முடிந்ததா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *