தமிழ் திரை உலகில் ஒரு முக்கியமான நடிகராக கலக்கி கொண்டு வருபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான தனுஷ் நடிக்க வந்த குறிப்பிட்ட காலகட்டத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . குறிப்பாக திருமணத்துக்கு பிறகும்,
ரஜினியின் மருமகன் என்ற அந்தஸ்தில் இருந்து வந்த தனுஷ் கடந்த வருடம் திடீரென தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டார் . இதற்கு என்ன காரணம் என்று அப்போது பலருக்கும் தெரியவில்லை . இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்ததற்கு காரணமே,
ரஜினியின் இளைய மகள்தான் என்று தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் தற்போது தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார் . ஆனால் இந்தப் படத்தை முதலில் இயக்க இருந்தது ஐஸ்வர்யாவின் தங்கையான சௌந்தர்யா தானாம் .
சில வருடங்களுக்கு முன்பே இந்த படத்தை தனுஷ் திரைக்கதை , வசனத்தில் சௌந்தர்யா இயக்க இருந்தாராம் . ஆனால் அப்போது சரியான நடிகர் , நடிகைகள் கிடைக்காததால் இந்த படம் பாதிலேயே நிறுத்தப்பட்ட தாம் . இந்தப் படத்தால்தான் தனுசுக்கும்,
ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தை சௌந்தர்யா இயக்க இருந்தது ஐஸ்வர்யாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம் . அது மட்டுமல்லாமல் சௌந்தர்யாவுடன் பணிபுரிய கூடாது என்று தனுஷிடம் ஐஸ்வர்யா ,
கூறியதாகவும் கூறப்படுகிறது. அதையும் மீறி இந்த படத்தை தொடங்கியதால் தான் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…