May 5, 2024

” தளபதி ” விஜய்யை தொடர்ந்து ..!! தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து உதவிய ” டாப் ஸ்டார் ” பிரசாந்த்..!! வெளிவந்த புகைப்படங்கள் உள்ளே ..!!

பிரசாந்த் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . இயக்குனரும் , நடிகருமான தியாகராஜனின் ஒரே மகனான பிரசாந்த் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார் நடிகர்  பிரசாந்த் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள் ,செம்பருத்தி ,

ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் ,பூமகள் ஊர்வலம், ஜோடி ,ஆசையில் ஒரு கடிதம் ,பிரியாத வரம் வேண்டும் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி காதல் படங்களில் நடித்து பிரபலமான பிரசாந்த்,

ஒரு கட்டத்தில் ஆக்சன் கதைக்களங்களை தேர்வு செய்து மார்க்கெட்டை இழந்தார் . இதனால் பல வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்த பிரசாந்த் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் .

இந்நிலையில் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உதவி இருந்தார் நடிகர் விஜய் . அவரை தொடர்ந்து தற்போது பிரசாந்தும் நேரில் சென்று உதவி செய்து இருக்கிறார் . அப்போது பேசிய பிரசாந்த் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவியது,

எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது . மேலும் கடவுள் அந்த பாக்கியத்தை எனக்கும் கொடுத்திருக்கிறார்.  இதுபோன்று எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் நடிகர் பிரசாந்த்.  தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *