தமிழ் சினிமா உலகில் ஒரு ஒப்பற்ற கலைஞனாக இருந்து வந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் சினிமாவில் ஜெயித்து காட்டியவர் விஜயகாந்த் . அப்படி ஆரம்பத்தில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலிலும் களமிறங்கி வெற்றியை ருசித்தார். ஆனால் இதன் பிறகு உடல் நலக்குறைவால் வீட்டிலேயே,
முடங்கிக் கிடந்த விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார். இவருடைய திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது . இப்படி இருக்கும் நிலையில் கேப்டனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க உள்ளாராம் இயக்குனர் ஒருவர்.
அவர் வேறு யாருமில்லை இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளருமான ஆபாவாணன் தான். இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஊமை விழிகள் ,உழவன் மகன் ,செந்தூரப்பூவே, காவியத்தலைவன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்திருக்கிறார் .
மேலும் ஆபாவாணன் – விஜயகாந்த் கூட்டணியில் முதன்முதலாக உருவான ஊமை விழிகள் திரைப்படம் அப்போது மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது . இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க உள்ளாராம் ஆபாவாணன் . இந்த படத்தில் தீனதயாளன்,
என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்திருந்தார் விஜயகாந்த் . இந்த கதாபாத்திரத்தை மீண்டும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்துக்கு உயிர் கொடுக்க உள்ளாராம் ஆபாவாணன் . இந்த தகவல் தற்போது கேப்டனின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது…