தமிழ் சினிமா உலகில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு தன்னுடைய தரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் விக்ரம். கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் விக்ரம் . பின்னர் இந்த படத்தை பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான,
சேது திரைப்படம் தான். இந்த படத்தில் சீயான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்த விக்ரம்தொடர்ந்து தில் ,ஜெமினி ,தூள், சாமி ,பிதாமகன் ,அருள், அந்நியன் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து,
தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகர் விக்ரம் ஒரு படத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் மெனக்கிடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அந்த வகையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில்,
நடித்துக்கொண்டு வருகிறார் .இந்நிலையில் தமிழ் சினிமா உலகில் 33 வருடங்களாக கலக்கிக் கொண்டு வரும் விக்ரமின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் ஒரு படத்திற்கு 25 முதல் 30 கோடி சம்பளம் வாங்கும் விக்ரமின் மொத்த சொத்து மதிப்பு 150 கோடி இருக்கும்,
என்று கூறப்படுகிறது. இது விஜய் அஜித்தின் சொத்து மதிப்பை விட கம்மிதான். காரணம் விக்ரம் ஆரம்பத்திலிருந்து தன்னுடைய சம்பளத்தை பெரிய அளவில் உயர்த்தாமல் இருந்து வந்தார். இதனால் தான் இவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு கம்மியாக இருப்பதாக கூறப்படுகிறது…