தற்போது தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். சமீப காலமாக அரசியலில் களமிறங்குவதற்காக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார் நடிகர் விஜய் . அந்த வகையில் அண்மையில் கூட பத்தாம் வகுப்பு , 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து பரிசும் சான்றிதழும் வழங்கி இருந்தார் .இப்படி இருக்கும் நிலையில் ,
விஜய் அரசியலுக்கு வந்தால் சீமானுக்கு தான் பிரச்சனை என்ற தகவல் வெளியானது. இது குறித்து பேசிய சீமான் கூறியதாவது, சமீபத்தில் விஜயின் “நான் ரெடி தான்” பாடல் வெளியாகி இருந்தது . இந்த படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சியில் விஜய் நடித்திருந்ததால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் இதற்கு முன்பு விஜய் நடித்த பல திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . ஆனால் இப்போது அவர் கட்சி ஆரம்பிக்க உள்ளதால் அவரின் முன்னேற்றத்தை தடுக்க இது போன்று செய்து வருகிறார்கள்.
மேலும் விஜய் அரசியலுக்கு வருவது ஒரு சிலருக்கு மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது . குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விஜய் அரசியலுக்கு வருவது திமுக , அதிமுகவுக்கு கூட பிரச்சனை இல்லை, சீமானுக்கு தான் பிரச்சனை என்றெல்லாம் கிளப்பி வருகிறார்கள் .
ஆனால் நாங்கள் எப்போதும் அடித்துக் கொள்ளவே மாட்டோம் . இரண்டு பேரும் சேர்ந்து மற்றவர்களை தான் காலி செய்வோம் என்றும் , நான் எப்போதும் யாருடனும் கூட்டணி அமைப்பது கிடையாது என்று வெளிப்படையாக கூறியிருந்தார் சீமான்…