தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர் .இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மோகன்லால் ,சிவராஜ் குமார் ,ஜாக்கிசராப் , விநாயகன் ,ரம்யா கிருஷ்ணன் ,வசந்த் ரவி,தமன்னா ,யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .கடந்த வியாழக்கிழமை வெளியான,
இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. அப்படி இந்த படத்தின் மூலம் வயசானாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் என்று தான் நிருபித்து உள்ளார் ரஜினிகாந்த் . குறிப்பாக சமீப காலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று பஞ்சாயத்து நடந்து வருவது அனைவருக்கும்,
தெரிந்த ஒன்றுதான் . ஆனால் சூப்பர் ஸ்டார் மீது அஜித் தும் விஜய்யும் அவ்வளவு மரியாதை வைத்திருக்கின்றனர் . அந்த வகையில் ஜெயிலர் படத்தை பார்த்த நடிகர் விஜய் நெல்சனுக்கே போன் செய்து வாழ்த்து தெரிவித்ததாகவும், அது மட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,
கும் வாழ்த்து சொல்லி இருக்கிறார் என்றும் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். மேலும் நடிகர் அஜித்தும் ஜெயிலர் படத்தை பார்த்து வியந்து போய் ஜெயிலர் பட குழுவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது . இப்படி தமிழ் ,
சினிமாவில் இருக்கும் நடிகர்களே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என்று கொண்டாடி வருகின்றனர் . ஆனால் ரஜினி ரசிகர்கள் மாறும் விஜய் ரசிகர்கள் தான் தேவை இல்லாமல் சண்டை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…