கடந்த சில மாதங்களாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி தான் ரசிகர்களிடையே பெரிய அளவில் நிலவிக் கொண்டு வருகிறது . அப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் கண்டிப்பாக விஜய்க்கு தான் போகும் என்று ஒரு பக்கம் கூறி வருகிறார்கள். மறுபக்கம் சூப்பர் ஸ்டார் பட்டம் சூப்பர் ஸ்டாருக்கு மட்டும்தான் என்று கூறி வருகின்றனர். இதனால் ரஜினி ரசிகர்களுக்கும் , விஜய் ரசிகர்களுக்கும் இடையே மிகப் பெரிய மோதல்கள் ஏற்பட்டது.
குறிப்பாக ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட இது குறித்து பேசி இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதால், இந்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்ற பேச்சு அப்படியே அமைதியாகிவிட்டது.
இப்படி இருக்கும் நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் டி டி எஃப் வாசன் தான் என்று கூறியுள்ளார் பிரபல இயக்குனர் ஒருவர். அவர் வேறு யாருமில்லை டி டி எஃப் வாசனை வைத்து மஞ்சள் வீரன் என்ற படத்தை இயக்க உள்ள இயக்குனர் செல்லம் தான். பைக் ரெய்டு சென்று அதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ,
டிடிஎஃப் வாசன் தற்போது மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இந்த படத்தின் இயக்குனரான செல்லம் கூறியதாவது , கடவுளின் அனுக்கிரகம் அனைத்தும் டிடிஎஃப் வாசனுக்கு உள்ளது .
எழுதி வச்சுக்கோங்க , அடுத்த சூப்பர் ஸ்டார் ஆவதற்கு எல்லா தகுதியும் டிடிஎஃப் வாசனுக்கு இருக்கு என்று கூறியுள்ளார், இருக்கிற பிரச்சனைக்கு நடுவில் இவர் இப்படி சொல்லியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…