தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய். லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . மேலும் நடிகர் விஜய் அண்மை காலமாக அரசியலுக்கு வருவதற்காக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார் ,
என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அந்த வகையில் நேற்று நெல்லை , தூத்துக்குடி போன்ற பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியிருந்தார் விஜய் . மேலும் விஜய்யின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை ,
கூறி வருகின்றனர். ஆனால் இந்த இடத்தில் மக்கள் நடந்து கொண்டது தான் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் நிவாரண பொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்று விஜய் உடன் செல்பி மட்டும் எடுத்துவிட்டு நிவாரண பொருள் வாங்காமல் சென்று இருக்கின்றனர்,
ஒரு சில நபர்கள் . மேலும் எத்தனையோ மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண உதவிக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தபோது வெறும் செல்பிக்காக மட்டுமே ஒரு சில நபர்கள் நிவாரண பொருள் வாங்க வந்தது விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக ஒரு இளம்பெண் விஜயிடம் செல்பி மட்டும் எடுத்துவிட்டு நிவாரண பொருள் வேண்டாம் என்று சொல்லியது விஜய்க்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…
Is it me or everyone felt like #ThalapathyVijay is kind of exhausted and angry pic.twitter.com/HqHV6ih8Fs
— Galli 2 Delhi (@galli2delhi) December 30, 2023