தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த திரிஷா மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கினார். இதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை திரிஷா. குறிப்பாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக ,
இருந்து வந்த திரிஷாவுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது . இதன் பிறகு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது . இதன் பிறகுதான் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் திரிஷா .
அப்படி சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து லியோ படத்திலும் நடித்திருந்தார் திரிஷா . ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி ,ஆதி, குருவி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . அந்த கெமிஸ்ட்ரி இந்த படத்திலும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது .
இப்படி இருக்கும் நிலையில் விஜய்யுடன் நடித்த நேரமோ என்னமோ திரிஷாவின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளது . அந்த வகையில் ஒரு படத்திற்கு நான்கு முதல் ஐந்து கோடி வரை சம்பளமாக வாங்கி வந்த திரிஷா அடுத்த படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்க உள்ளாராம்.
அது மட்டுமல்லாமல் தற்போது நடிகை திரிஷா நாலு பெரிய நடிகர்களின் படங்களை கைவசம் வைத்திருக்கிறார் . இதனால் வரும் காலங்களில் திரிஷாவின் மார்க்கெட் இன்னும் உச்சத்தை தொடும் என்று கூறப்படுகிறது…