உயிர் நண்பன் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று கேப்டனுக்கு நல்ல நண்பனாய் இருந்தவர் தான் இப்ராஹிம் ராவுத்தர். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த விஜயகாந்த் உடன் ராவுத்தரும் கிளம்பி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் பல இடங்களில் அவமானங்களை சந்தித்து இருக்கிறார் விஜயகாந்த் . அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்தது மட்டுமல்லாமல் ,
கேப்டனை யார் யார் திட்டினார்களோ அவர்களிடம் எல்லாம் சண்டைக்கு சென்று இருக்கிறார் ராவுத்தர். இதன் பிறகு கேப்டன் நடித்த ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததால் அந்த நேரத்தில் ராவுத்தர் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி கேப்டனின் பல சூப்பர் ஹிட் படங்களை,
தயாரித்து இருந்தார் ராவுத்தர் . குறிப்பாக கேப்டனின் திரை வளர்ச்சிக்கு ராவுத்தரின் பங்கு பெரிய அளவில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இன்னும் சொல்ல போனால் தளபதி படத்தை விட இவர்களுடைய நட்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதோடு திருமணமானால் ,
நட்பு பிரிந்து விடுமோ என்பதால் ராவுத்தர் திருமணம் கூட செய்து கொள்ளவில்லையாம் . ஆனால் ஒரு கட்டத்தில் அரசியலில் விஜயகாந்த் இறங்கினார் . அப்போது அவருடைய முடிவுகள் ராவுத்தருக்கு பிடிக்க வில்லையாம் . இதனால் தான் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் ராவுத்தர் இறந்த போது ரொம்ப மனமுடைந்து விட்டாராம் விஜயகாந்த் . இன்னும் சொல்லப் போனால் இவருடைய இறப்பிற்கு பிறகு தான் விஜயகாந்தின் உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது…