தமிழ் சினிமாவை கலக்கி வரும் மூத்த முன்னணி நட்சத்திரம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் திருமணமாகி 18 ஆண்டுகள் இருவரும் சந்தோஷமாகத்தான்,
குடும்பம் நடத்தி வந்தனர் . ஆனால் திடீரென கடந்த 2022 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்திருந்தனர். இந்த தகவல் ரசிகர்களை மட்டுமல்லாமல், பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக இந்த விஷயத்தை கேட்ட உடனேயே ,
ரஜினி உடைந்து போய்விட்டாராம் . இதன் பிறகு தனுஷும், சௌந்தர்யாவும் தனித்தனியாக இருந்து வருகிறார்களாம். இப்படி இருக்கும் நிலையில் இன்று காலையிலேயே ரஜினி குடும்பத்திற்கு ஒரு சந்தோஷமான செய்தி வந்திருக்கிறது. அது என்னவென்றால் விவாகரத்து ஆனாலும்,
மனைவி இயக்கிய லால் சலாம் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் “லால் சலாம் டுடே” என்று ட்விட் செய்திருந்தார் தனுஷ். குறிப்பாக மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு தான் தனுஷ் இப்படி தூது விட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது . அதோடு ஐஸ்வர்யாவும், தனுசுடன்,
சேர்ந்து வாழ வேண்டும் ,அப்போதுதான் அப்பா சந்தோஷப்படுவார் என்று முடிவெடுத்திருக்கிறாராம் .குறிப்பாக தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்வதற்கு முக்கிய காரணமே அவர்களுடைய மகன்களுக்காக தானாம் . இதனால் சூப்பர் ஸ்டாரின் குடும்பமே சந்தோஷத்தில் இருந்து வருகிறார்களாம்…