April 28, 2024

விஜயகாந்தின் மரணத்தில் சந்தேகம் இருக்கு ..!! பகீர் கிளப்பிய பிரபலம் ..!! அவருக்கு செய்வினை வைக்கப்பட்டதா ..??

நடிகரும் , தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் . இவருடைய திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . இதை அடுத்து நேற்று தேமுதிக அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது . இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ,

யாரோ செய்வினை வைத்துள்ளார்கள் என்று பகீர் கிளப்பியுள்ளார் பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை இசையமைப்பாளரும் , இயக்குனருமான கங்கை அமரன் தான் . அந்த வகையில் அவர் கூறியதாவது,  அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு சென்று,

சிகிச்சை பெற்றும் கூட கேப்டன் விஜயகாந்த்தால் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை.  அது ஏமாற்றம்தான் . இதனால் அவர் சாப்பிடும் உணவில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டதா என்ற சந்தேகமும் தோன்றுகிறது.  இத்தனை இடத்தில் சிகிச்சை எடுத்தும் கூட ,

அவருக்கு உடல்நிலை சரியாகதற்கு காரணமே  செய்வினை தான் என்று கூறியுள்ளார் கங்கை அமரன் . மேலும் கடந்த சில வருடங்களாக அவரை பார்க்க முடியவில்லை.  அப்படி மட்டும் பார்த்து இருந்தால் ஆன்மீகத்தின் மூலம் அவரை எப்படியாவது குணப்படுத்துவதற்கு ,

அவர்களுடைய குடும்பத்தினரிடம் கூறியிருப்பேன் என்று சொல்லி இருந்தார் கங்கை அமரன். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *