கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திடீர் மரணம் தமிழ் திரை உலகிற்கே மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது . காரணம் இவரால் வாழ்ந்தவர்கள் தான் அதிகம் . குறிப்பாக நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்தபோது கேப்டன் செய்த பல விஷயங்கள் இப்போதும் பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது. அதோடு நடிகர் நடிகைகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக போய் நிற்பார் விஜயகாந்த் .
அப்படி இருந்தும் அவர் இறந்த பிறகு ஒரு சில நடிகர்கள் விஜயகாந்தின் முகத்தை பார்க்க வரவில்லை . அந்த வகையில் தமிழ் சினிமாவை சேர்ந்த ரஜினி , கமல் போன்ற பல நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து சூர்யா, கார்த்தி, விஷால் ,
தனுஷ் , சிவகார்த்திகேயன் , சிம்பு போன்ற நடிகர்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் அஜித்தும் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதாவுக்கு போன் செய்து ஆறுதல் கூறியிருந்தார்.
ஆனால் இவர்களுக்கெல்லாம் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் பல உதவிகளை செய்து இருக்கிறார் விஜயகாந்த் . இவர்கள் நினைத்து இருந்தால் கண்டிப்பாக விஜயகாந்தின் முகத்தை பார்ப்பதற்கு வந்திருக்கலாம் . ஆனால் வெறும் பேச்சுக்கு மட்டும் இரங்கலை தெரிவித்து விட்டு அவர்களுடைய ,
வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர் . இன்னும் சொல்லப்போனால் வடிவேலு உள்ளூரிலேயே இருந்து கொண்டு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் ஊருக்கு மட்டும் தான் உபதேசம் சொல்வார்கள் போல என்று கூறி வருகின்றனர்…