தற்போது சென்னையில் மிக்ஜாம் புயலால் பல இடங்கள் சேதாரம் அடைந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் தொடர் மழையால் சென்னையே வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது . இதனால் சென்னை மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்கவில்லை. குறிப்பாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து பெரிய அளவில் கஷ்டப்பட்டு வருகின்றனர் சென்னை மக்கள் . மேலும் இதற்கு முன்பு கடந்த 2015ஆம் ஆண்டு ,
இதுபோன்று நடந்திருந்தது. அதன் பிறகு இப்படி ஒரு வெள்ளத்தில் சிக்கியுள்ளனர் சென்னை மக்கள் . இருந்தாலும் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை அக்கம் பக்கத்தினருக்கு செய்து கொண்டு தான் வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவை கலக்கி வரும்,
பிரபல நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 10 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுக்க உள்ளார்களாம் . அந்த வகையில் முதற்கட்டமாக சென்னை ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,திருவாரூர் போன்ற இடங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக ,
10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்களாம் . அதை தன்னுடைய ரசிகர் மன்றங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க சொல்லி உத்தரவிட்டு உள்ளார்களாம். மேலும் 100 கோடி , 200 கோடி சம்பளம்,
வாங்கும் நடிகர்களுக்கு மத்தியில் சூர்யா மற்றும் கார்த்தி போன்ற நடிகர்கள் உதவ முன் வந்ததை பலரும் பாராட்டி வருகின்றனர் …