கேப்டன் விஜயகாந்த் அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . மேலும் அவருடைய கொள்கையை அப்படியே பின்பற்றி வந்தார் விஜயகாந்த். இதனால்தான் பின்னாளில் கருப்பு எம்.ஜி.ஆர். என்று மக்களால் அழைக்கப்பட்டார் விஜயகாந்த் . இப்படி எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்த விஜயகாந்தின் இறப்பிலும் எம்ஜிஆர் இறப்பிலும் ,
இப்படி ஒரு ஒற்றுமை இருக்கிறதாம் . அது என்னவென்றால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் டிசம்பர் 24 ,மார்கழி 9 அன்று இறந்தார் . இவரை தொடர்ந்து தற்போது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் டிசம்பர் 28,மார்கழி 12 இறந்திருக்கிறார் . குறிப்பாக மார்கழி மாதத்தில் ,
இறப்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என்று ஒரு ஐதீகம் உள்ளது. இதனால் எம் ஜி ஆர் போன இடத்திற்கே கருப்பு எம் ஜி ஆர் அவர்களும் செல்வார் என்று கூறப்படுகிறது …