April 27, 2024

விஜய் ரசிகர்களுக்கு இருக்கும் நன்றி கூட விஜய்க்கு இல்லை ..!! கேப்டனுக்காக மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள் ..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

தற்போது நடிகரும் , அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . இதனால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பல பேர் அவர் பூரண குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர் . ஆனால் தமிழ் சினிமாவை சேர்ந்த ஒரு சில பிரபலங்கள் ,

தற்போது வரை இதுகுறித்து கண்டுகொள்ளாதது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது . அதிலும் குறிப்பாக ஆரம்ப காலகட்டத்தில் விஜய்யை வளர்த்து விட்டதே விஜயகாந்த் தான் . அப்படி நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் விஜய் அறிமுகமானாலும் ,

அவருக்கு செந்தூரப்பாண்டி திரைப்படம் தான் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது . இந்த படத்திற்காக சம்பளமே வாங்காமல் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜயகாந்த்.  அப்படி இருந்தும் அந்த நன்றியை மறந்திருக்கிறார் நடிகர் விஜய் .

இந்நிலையில் கேப்டனுக்காக மன்சூர் சாப்பிட்டு பிரார்த்தனை செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள் . அந்த வகையில் திருச்சி அருகே உள்ள ஒரு கோவிலில் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தது மட்டுமல்லாமல்,

விஜயகாந்தின் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் செய்துள்ளனர் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது.  இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் ரசிகர்களுக்கு இருக்கும் நன்றி கூட விஜய்க்கு இல்லை போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *