April 24, 2024

கூவத்தூர் சர்ச்சை ..!! அவரை சும்மா விடமாட்டேன் ..!! கோபத்தில் திரிஷா போட்ட பதிவு ..!!

அண்மைக்காலமாக நடிகை திரிஷாவின் பெயர்தான் அடிக்கடி மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது . அந்த வகையில் கடந்த வருடம் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷாவை மிகவும் சர்ச்சையாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.  அதன் பிறகு நடிகை திரிஷாவும் கோபத்தில் பதிவு போட்டிருந்தார் . இதன் பிறகு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதும் இந்த பிரச்சனை முடிந்தது .

இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் அடுத்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் நடிகை திரிஷா . அந்த வகையில் நேற்று அதிமுக கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளரான ஏ வி ராஜு திரிஷா குறித்து கூறியதாவது , கூவத்தூரில் இருக்கும் போது நடிகை திரிஷா தான் வேண்டும் என்று,

ஒரு எம்எல்ஏ அடம் பிடித்ததாகவும், அதற்கு 25 லட்சம் தரப்பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் . இதைப் பார்த்த பல சினிமா பிரபலங்கள் ஏ வி ராஜு வுக்கு எதிராக  கொந்தளித்தார்கள் . இதை பார்த்த நடிகை திரிஷா பிரபலமாக வேண்டும் என்பதற்காக எந்த அளவிற்கு,

கீழே இறங்குபவர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது.  நிச்சயம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இனி சொல்ல வேண்டியது அனைத்தையும் என்னுடைய இல்லீகள் டிபார்ட்மெண்டிடம் இருந்து வரும் என்று கோபத்தில் கூறியிருந்தார் நடிகை திரிஷா…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *