April 22, 2024

” பலான விஷயத்தை ” பேசினால் தான் பாக்குறீங்க ..!! நல்லத பேசுனா யாரு பாக்குறீங்க ..?? ரசிகர்கள் மீது பழியை போட்ட பயில்வான் ..!!

பயில்வான் ரங்கநாதன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஆவார் . கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் பயில்வான் ரங்கநாதன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தர்மதுரை, ஆவாரம் பூ , ஊர் மரியாதை , ஜெய்ஹிந்த், ஆணழகன் ,அவ்வை சண்முகி ,மறுமலர்ச்சி ,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.  ஆனால் சமீப காலமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தமிழ் சினிமா நடிகர் , நடிகைகளை பற்றிய பலான விஷயங்களை பரப்பிக் கொண்டு வருகிறார் பயில்வான் ரங்கநாதன் .

இதனால் பல்வேறு சர்ச்சைக்கும் ஆளானார் . அதுமட்டுமில்லாமல் ஒரு நடிகை இவரை பொது இடத்தில் வைத்து சராமரியாக கேள்வி எழுப்பி இருந்தார் . அப்படி அசிங்கபட்டும் கூட இன்னும் அடங்காமல் இருந்து வருகிறார்  பயில்வான் . இப்படி இருக்கும் நிலையில்,

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதனிடம் , சினிமாவில் பேசுவதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்த போதும் , நீங்கள் ஏன் பிரபலங்களின் பலான விஷயங்களை மட்டும் பேசுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.  அதற்கு பதிலளித்த பயில்வான் ,

நான் பகவத் கீதை , பைபிள் பற்றி பக்கம் பக்கமாக பேசினாலும் யாருமே பார்க்க மாட்டார்கள் . இந்த மாதிரி நடிகைகளை பற்றி பேசினால் மட்டுமே ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *