தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வரவேண்டிய நடிகை அஜித்தால் காணாமல் போனதுதான் சோகமே . அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஹீரா தான். கடந்த 1999 ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான இதயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை . இப்படி வெளியான முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் நடிகை ஹீரா .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து திருடா திருடா ,சதி லீலாவதி ,காதல் கோட்டை ,அவ்வை சண்முகி ,தொடரும் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் ,
கலக்கி கொண்டு வந்தார் . குறிப்பாக அஜித்துடன் இணைந்து காதல் கோட்டை , தொடரும் போன்ற படங்களில் நடித்திருந் ஹீரா மீது காதல் வயப்பட்டார் நடிகர் அஜித் . பின்னர் ஹீராவின் அம்மாவிடமே சென்று பெண் கேட்டு இருக்கிறார் அஜித் . ஆனால் நடிகை ஹீராவின் அம்மா,
என்னுடைய மகள் இப்போதுதான் சினிமாவில் வளர்ந்து வருகிறாள் . இப்போது எல்லாம் திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டாராம். பின்னர் ஹீராவும் அஜித்தை ஒதுக்கி வைத்திருக்கிறார் . இதனால் அஜித் ஹீராவை மறந்து விட்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம்,
செய்து கொண்டார் . இவருடைய திடீர் திருமணம் ஹீராவுக்கு மிகப்பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது . இதனால் சினிமாவை விட்டு விலகிவிட்டாராம் நடிகை ஹீரா . அந்த வகையில் கிட்டத்தட்ட 24 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் நடிகை ஹீரா…