April 26, 2024

இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் கேப்டனின் பெயர் மறையாது ..!! நேரில் சென்று அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின் ..!!

கேப்டன் விஜயகாந்தின் திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் ஒரு நல்ல நடிகரையும் , நல்ல மனிதரையும் நாம் இழந்து விட்டோம் என்று பலரும் கதறி வருகின்றார் . குறிப்பாக சிங்கம் போல இருந்து வந்த விஜயகாந்த் தன்னுடைய உடல் நிலையில் கவனம் செலுத்தாதது தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது .

அப்படி பல வருடங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்த விஜயகாந்த் நேற்று பொது பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார் . ஆனால் காலையில் அவர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது . இந்த தகவலை கேட்டு விஜயகாந்தின் ரசிகர்கள் அனைவரும் கதறி கதறி அழுதனர் .

இப்படி இருக்கும் நிலையில் அரசியல் பிரபலங்களும் , தமிழ் சினிமா பிரபலங்களும் நேரில் சென்று கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மகனும் , அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தது மட்டுமல்லாமல் , கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பணிகள் காலத்தால் அழியாதவை என்று குறிப்பிட்டிருந்தார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *