கேப்டன் விஜயகாந்தின் திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் ஒரு நல்ல நடிகரையும் , நல்ல மனிதரையும் நாம் இழந்து விட்டோம் என்று பலரும் கதறி வருகின்றார் . குறிப்பாக சிங்கம் போல இருந்து வந்த விஜயகாந்த் தன்னுடைய உடல் நிலையில் கவனம் செலுத்தாதது தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது .
அப்படி பல வருடங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்த விஜயகாந்த் நேற்று பொது பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார் . ஆனால் காலையில் அவர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது . இந்த தகவலை கேட்டு விஜயகாந்தின் ரசிகர்கள் அனைவரும் கதறி கதறி அழுதனர் .
இப்படி இருக்கும் நிலையில் அரசியல் பிரபலங்களும் , தமிழ் சினிமா பிரபலங்களும் நேரில் சென்று கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மகனும் , அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தது மட்டுமல்லாமல் , கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பணிகள் காலத்தால் அழியாதவை என்று குறிப்பிட்டிருந்தார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…