தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அப்போதிலிருந்து இப்போது வரை இவரிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது , அது என்னவென்றால் இவருக்கு தெரிந்து யாராவது கஷ்டப்பட்டால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பெரிய உதவி செய்து விடுவாராம் ரஜினி . அப்படித்தான் மறைந்த நடிகர் ஒருவருக்கும் பெரிய உதவியை சேர்ந்திருக்கிறார் ரஜினி.
அவர் வேறு யாருமில்லை பழம்பெரும் நடிகரான வி கே ராமசாமி தான் . 1947 ஆம் ஆண்டு வெளியான நாம் இருவர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் வி கே ராமசாமி . பின்னர் எம்ஜிஆர் சிவாஜி போன்ற பல நடிகர்களின் படங்களின் கலங்கி கொண்டு வந்த வி கே ராமசாமி,
பின்னர் நகைச்சுவை வேடங்களிலும் , குணசத்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டு வந்தார் . இப்படி இருக்கும்போது சினிமாவில் எடுத்த தவறான முடிவால் வறுமையில் இருந்திருக்கிறார் வி கே ராமசாமி. அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாரின் படத்தை தயாரிப்பதற்கும்,
ஆசைப்பட்டிருக்கிறார் . ஆனால் வி கே ராமசாமி வறுமையில் இருந்ததால் ரஜினியின் படத்தை தயாரிக்க முடியவில்லை. இதன் பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அருணாச்சலம் . இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் வி கே ராமசாமியையும் இணைத்திருக்கிறார் ரஜினி .
இதற்கும் விகே ராமசாமி இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லையாம் . அப்படி இருந்தும் இந்தப் படத்தின் லாபத்தில் ஒரு பங்கை கொடுத்திருக்கிறார் ரஜினி. இதனால் நெகிழ்ந்துபோன விகே ராமசாமி ரஜினியின் புகைப்படத்தை பூஜை அறையிலேயே வைத்து பூஜை செய்து வந்தாராம்…