April 24, 2024

60 கோடி கடன் ..!! சிவகார்த்திகேயனை தொடர்ந்து பெருங்கடனாளியான நடிகர் ..!! இதனால் தான் ஓய்வில்லாமல் ஓடுகிறாரா ..??

தமிழ் சினிமா உலகில் கொடி கட்டி பறந்து வந்த பல பிரபலங்கள் படம் தயாரித்து பின்னர் பெரும் கடனாளி ஆகியுள்ளனர் . அந்த வகையில் சிவகார்த்திகேயன்,  கஞ்சா கருப்பு போன்ற பல நடிகர்களை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் இயக்குனரும்,  நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன்.  ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கௌதம் மேனன்  கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ,

மின்னலே  என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டார் கெளதம் மேனன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காக்க காக்க ,வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா ,

என்னை அறிந்தால் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் கௌதம் மேனன் . அதன் பிறகு அவர் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா , துருவ நட்சத்திரம் போன்ற படங்களை தயாரித்து மிகப்பெரிய கடனாளியாக மாறினார் கௌதம் மேனன் .

இன்னும் சொல்லப்போனால் தற்போது இயக்குனர் கௌதம் மேனனுக்கு 60 கோடி கடன் இருக்கிறதாம் . அது அவருடைய தனிப்பட்ட கடன் இல்லை என்றாலும் , அவருடைய படங்களுக்காக வாங்கிய கடன் என்பதால் தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு முழுநேர நடிகராக ,

பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் கௌதம் மேனன் . குறிப்பாக இந்த பிரச்சனையால் தான் இவருடைய துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்று கூறப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *