தற்போது இந்திய அளவில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்து வருகிறார் இயக்குனர் அட்லீ . ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த இயக்குனர் அட்லீ தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி,
மெர்சல் ,பிகில் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் . இப்படி தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த இயக்குனர் அட்லீ ஹிந்தி சினிமாவிற்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி படமாக,
அமைந்தது மட்டுமல்லாமல் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் இயக்குனர் அட்லீ அடுத்து யாரை வைத்து படம் எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் எழுந்துள்ளது . மேலும் இயக்குனர் அட்லீ விஜய் அல்லது ஷாருக்கானை,
வைத்து தான் அடுத்த படம் இயக்குவார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது . ஆனால் இயக்குனர் அட்லீ அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனை வைத்து தான் அடுத்த படத்தை இயக்க உள்ளாராம். குறிப்பாக சமீபத்தில் தான் சிறந்த நடிகருக்கான ,
தேசிய விருதை அல்லு அர்ஜுன் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது…