சாய் பல்லவி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகை ஆவார் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாய் பல்லவி கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் . பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை சாய் பல்லவி.
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து என் ஜி கே, பாவக்கதைகள், கார்கி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சாய் பல்லவி . மேலும் நடிகை சாய் பல்லவி தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களுக்கும் அதிக முக்கியத்துவம் ,
கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அந்த வகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை சாய் பல்லவி . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சாய்பல்லவி,
எனக்கு ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, ஆண்கள் என்று சொன்னால் பேண்ட், சட்டை அவ்வளவுதான் . ஆனால் பெண்களைப் பார்க்கும் போது வித்தியாசமான டிரஸ் போடுவது ,ஹேர் ஸ்டைல் செய்வது,
கண் அழகாக இருக்கும் , இது எல்லாவற்றையும் ரசித்து பார்ப்பேன் . இதனால் ஒவ்வொரு விஷயத்திலும் ஆண்களை விட பெண்கள் ரொம்ப அழகு என்று கூறியிருந்தார் நடிகை சாய் பல்லவி…