May 5, 2024

விஜய் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரா..?? கிடையவே கிடையாது..!! தயங்காமல் சொல்லிய எஸ் ஏ சந்திரசேகர் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் எழில் . ஆரம்பத்தில் உதவி  இயக்குனராக பணியாற்றி வந்த எழில் கடந்த 1999 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . அது மட்டுமல்லாமல் ,

இந்த படம் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி ,மனம் கொத்திப் பறவை, தேசிங்குராஜா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் எழில் .

ஆனால் சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளியான எந்த படமும் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை . அதனால்  தேசிங்குராஜா 2  படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார் எழில் . இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட,

எஸ் ஏ சந்திரசேகர் கூறியதாவது , துள்ளாத மனமும் துள்ளும் படம் வெள்ளி விழா கொண்டாடியது , அப்போது விஜய் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரா.? கிடையவே கிடையாது , இருந்தாலும் அந்த கதை அவரை தூக்கி விட்டது. இந்த படத்திற்கு பிறகு தான் விஜய்க்கு கேரளாவில் ,

ரசிகர்கள் அதிகமானார்கள் . உண்மையை ஒத்துக்கொள்வதற்கு நான் எப்போதும் தயங்க மாட்டேன் . அந்தப் படத்தின் திரைக்கதை , அப்படி அந்த படத்தில் யார் நடித்திருந்தாலும் கண்டிப்பாக வெள்ளிவிழா கொண்டாடி இருக்கும் என்று கூறியிருந்தார் எஸ் ஏ சந்திரசேகர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *