தமிழ் சினிமா உலகில் கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் முதல்வன் . இந்தப் படத்தில் அர்ஜுன் இணைந்து மனிஷா கொய்ராலா ,ரகுவரன் ,லைலா மணிவண்ணன் ,வடிவேலு ,கலைராணி ,விஜயகுமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது மட்டுமல்லாமல்,
100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது . இப்படி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது அர்ஜுனே கிடையாதாம் . அந்த வகையில் இந்த கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மனதில் வைத்து தான் எழுதி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர் .
ஆனால் இது அரசியல் கதை என்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிராகரித்து விட்டாராம். இதன்பிறகு கமலிடம் கேட்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர் . ஆனால் அப்போது கமல் ஹேராம் படத்தை இயக்கி நடித்துக்கொண்டு வந்ததால் அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம்.
இதன் பிறகு நடிகர் விஜய்யிடம் கேட்டு இருக்கிறார் இயக்குனர் ஷங்கர் . ஆனால் விஜய்யும் அரசியல் கதை என்பதால் இந்த படத்தை நிராகரித்திருக்கிறார் . இதன் பிறகு ஒரு நடிகரை கேட்ட ஷங்கர் அவரும் முடியாது என்றதும் அர்ஜுனை வைத்து படத்தை முடித்திருக்கிறார்…