விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ரோபோ சங்கர் தமிழில் வெளியான ஒரு சில படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கி கொண்டு வந்த ரோபோ சங்கர் திடீரென எலும்பும் தோலுமாக மாறினார்.
இதற்கு காரணம் அவருக்கு இருந்த குடிப்பழக்கம் தானாம் . அதனால் தான் இவர் இப்படி மாறியதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ரோபோ சங்கரை பார்த்து நான் குடிப்பதையே நிறுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகர் விமல் தான் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் ,
நடித்து வந்த விமல் பசங்க என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விமல். இந்நிலையில் பல வருடங்கள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நடிகர் விமலும் குடிப்பழக்கத்திற்கு ,
அடிமையாக இருந்தாராம். அதனால் அவருடைய உடல் நிலையும் பாதிப்படைந்ததாம் . அப்போதுதான் ரோபோ சங்கரின் உடல் நிலையை பார்த்து பயந்து போன விமல் குடிப்பதையே நிறுத்திவிட்டாராம். அந்த அளவிற்கு ரோபோ சங்கர் என்னை போன்ற பலருக்கு சாவு பயத்தை காட்டி விட்டதாக கூறியிருந்தார் நடிகர் விமல்.
அது மட்டுமல்லாமல் நான் குடித்தே 45 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.இனிமேல் குடிப்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகர் விமல் . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …