தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெய் பீம் பட இயக்குனரான டி ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 170 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . இதை முடித்த கையோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் மாஸ்டர் படத்திலிருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு ,
வசனம் எழுதி வருகிறார் இயக்குனர் ரத்னகுமார் . அப்படி லியோ படத்தின் வெற்றி விழாவின் போது ரஜினியை விமர்சித்து பேசியிருந்தார் இயக்குனர் ரத்னகுமார். இதனால் தன்னுடைய படத்தில் ரத்னகுமார் பணியாற்றக் கூடாது என்று ரஜினி கண்டிஷன் போட்டதாக ,
அப்போது தகவல் வெளியானது . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இதுகுறித்து கூறியதாவது , ரத்னகுமார் தற்போது படங்களை இயக்க தொடங்கிவிட்டார் . அதனால் நம்பிக்கையான ஒருவரை தேடினேன் . அப்போதுதான் எனக்கு,
விஜய்குமார் கிடைத்தார் என்று கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ். மேலும் விஜய்குமார் உறியடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் . அது மட்டுமல்லாமல் சூரரைப்போற்று படத்திற்கும் வசனம் எழுதியது விஜய்குமார் தான் .
இதனால் லோகேஷும் , விஜய்குமாரும் ரஜினியின் படத்தில் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது…