April 30, 2024

அதை செய்து 8 வருஷமாச்சு ..!! நடிகைகள் சொல்ல தயங்கும் விஷயத்தை வெளிப்படையாக கமலின் மகள் ..!!

ஸ்ருதிஹாசன் ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் ஹிந்தி படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார் . பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதிஹாசன்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து 3 ,பூஜை, புலி ,வேதாளம் ,சிங்கம் 3 , லாபம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன் . தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் .

இப்படி இருக்கும் நிலையில் நடிகைகள் சொல்ல தயங்கும் விஷயத்தை வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன் . அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசனிடம் மது பழக்கம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர் . அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன்,

ஒரு காலத்தில் நான் போதைக்கு அடிமையாக இருந்தேன் . தினமும் பாட்டிக்கு சென்று குடிப்பதையே வழக்கமாக வைத்திருந்தேன் . அதுதான் என்னை கண்ட்ரோல் செய்தது.  பின்னர் ஒரு கட்டத்தில் இதனால் எனக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை என்று புரிந்து கொண்டேன்.

அதனால் பார்ட்டிக்கு செல்வதையே தவிர்க்க தொடங்கினேன் . அதோடு குடிப்பழக்கம் உடையவர்களுடனும் நட்பை குறைத்துக் கொண்டேன்.  தற்போது மது அருந்துவதை விட்டு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *