தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் அசோக் செல்வன் . சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் அசோக் செல்வன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெகிடி ,கூட்டத்தில் ஒருத்தன் , ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், போர் தொழில் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கு ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக படத்திற்கு படம் ,
வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் அசோக் செல்வன். இந்நிலையில் 33 வயதாகும் அசோக் செல்வன் பிரபல நடிகை ஒருவரை அடுத்த மாதம் திருமணம் செய்ய உள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தான். இவரும் அசோக் செல்வனும் ,
இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளனர் . அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது . அதோடு கீர்த்தி பாண்டியனின் அப்ப வான அருண்பாண்டியன் ஒரு தயாரிப்பாளர் ஆவார் . இதனால் இதைப் பார்த்த ரசிகர்கள் புடிச்சாலும் புளியங்கொம்பாக பிடித்து விட்டாரே என்று கூறுகின்றனர்…