April 27, 2024

கமலுடன் ஒரு படம் தான் நடித்தேன்..!! அவர் இப்படி பண்ணுவாருன்னு நான் நினைச்சு கூட பார்க்கல ..!! உண்மையை சொல்லிய பாபநாசம் பட நடிகை ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பாபநாசம்.  இந்த படத்தில் கமலுடன் இணைந்து கௌதமி ,நிவேதா தாமஸ் ,எஸ்தர் அணில் ,கலாபவன் மணி, டெல்லி கணேஷ், இளவரசு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது .

அப்படி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ஆஷா  சரத் . பிரபல மலையாள திரைப்பட நடிகையான ஆஷா சரத் பாபநாசம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

தூங்காவனம் , பாகமதி , அன்பறிவு போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஆஷா சரத் .  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய  பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் குறித்து ஆஷா சரத் கூறியதாவது,  கமல்ஹாசன் சார் ஒரு நடிப்பு ஜாம்பவான் என்று நிறைய பேர் சொல்லி நான்,

கேள்விப்பட்டிருக்கிறேன்.  அப்படி அவருடன் நான் படப்பிடிப்பில் இருக்கும் போது அதை உணர்ந்தேன்.  குறிப்பாக இயக்குனரை விட ஒவ்வொரு காட்சிகளையும் எனக்கு அவ்வளவு தெளிவாக சொல்லிக் கொடுப்பார் கமல் சார் . பின்னர் பாபநாசம் படத்தில் என்னுடைய நடிப்பை,

பார்த்துவிட்டு அவருடைய அடுத்த படமான தூங்காவனம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் . அவருடன் ஒரு படம் தான் நடித்தேன் . ஆனால் இப்படி செய்வார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறியிருந்தார் நடிகை ஆஷா சரத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *