April 30, 2024

பேய் கதைக்கு மூட்டை கட்டிய ராகவா லாரன்ஸ் ..!! அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா ..?? அப்ப தேசிய விருது உறுதி ..!!

ராகவா லாரன்ஸ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் இயக்குனர் மற்றும் நடன அமைப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக பணியாற்றி வந்தார் ராகவா லாரன்ஸ். பின்னர்  ஒரு கட்டத்தில் நடிகராகவும் களமிறங்கினார் . இதன் பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்த ராகவா லாரன்ஸ் அதிலும் வெற்றி கண்டார் . குறிப்பாக தமிழ் ரசிகர்களிடையே இவர் பெரிய அளவில் பிரபலமானது முனி ,

காஞ்சனா போன்ற படங்களின் மூலம்தான் . என்னதான் இந்தத் திரைப்படங்கள் இவரை தூக்கி விட்டாலும் , பின்னர் அதே போலவே பேய் கதை படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை வெறுப்பேற்றினார் ராகவா லாரன்ஸ்.  அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ,

வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது . ஆனால் இதன் பிறகு இவருடைய நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா 2 திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

இதனால் அடுத்த படத்தில் கண்டிப்பாக தேசிய விருது வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார் ராகவா லாரன்ஸ் . அவர் வேறு யாருமில்லை இந்த வருடத்தின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட அயோத்தி படத்தின் ,

இயக்குனரான மந்திரமூர்த்தி தான்.  இவர் இயக்கும் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளாராம் . இதனால் கண்டிப்பாக இந்த திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தரலாம் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *