April 27, 2024

நான் மன்னிப்பு கேட்கிற ஜாதி கிடையாது ..!! பூகம்பம் போல வெடித்த திரிஷா விவகாரம் ..!! மன்சூர் அலிகான் என்ன சொல்லுறாரு பாருங்க ..!!

கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாவில் பேசு பொருளாக மாறியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான் . அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை திரிஷாவை பற்றி மிகவும் கொச்சையாக பேசியிருந்தார் மன்சூர் அலிகான் . இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் மனமடைந்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார் நடிகை திரிஷா.  இதற்கு குஷ்பூ ,லோகேஷ் கனகராஜ் ,கார்த்திக் சுப்புராஜ் போன்ற பல பிரபலங்கள் ,

ஆதரவு கொடுத்து வருகின்றனர்.  குறிப்பாக மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளதாம் . இருந்தாலும் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டால் இது எதுவும் நடக்காது என்றும் கூறப்படுகிறது.  இதை அடுத்து இதெல்லாம் குறித்து,

பேசிய மன்சூர் அலிகான் கூறியதாவது,  நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கிறது.  ஆனால் இந்த பிரச்சனையை பெருசாகி என்னை அரசியல் ரீதியாக ஒழிக்க பார்க்கிறார்கள்.  குறிப்பாக திரிஷா இனிமேல் என்னுடன் நடிக்க மாட்டேன் என்று சொன்னது எனக்கு வருத்தத்தை,

ஏற்படுத்தியுள்ளது.  நான் அந்த அளவிற்கு மோசமான ஆளா.?  இப்பதான் ஏண்டா லியோ படத்தில் நடித்தோம் என்று இருக்கு . பேசாம அந்த படத்தில் நடிக்காமலேயே இருந்திருக்கலாம் . மேலும் நான் தப்பு செய்தால் தானே மன்னிப்பு கேட்க முடியும் . நான் மன்னிப்பு கேட்கிற ஜாதியா.?

இது குறித்து நடிகர் சங்கத்திடம் நான் பேசி இருக்கிறேன்.  அங்கு திரிஷாவை வர வைத்து நான் பேசிய உண்மையான வீடியோவை போட்டு காட்டுவேன்.  அப்போதுதான் திரிஷாவுக்கும் , மற்றவர்களுக்கும் உண்மை புரியும் என்று கூலாக கூறியிருந்தார் நடிகர் மன்சூர் அலிகான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *