May 9, 2024

நேர்மையாக இருந்தது தான் ..!! விஜயகாந்த் பண்ணிய மிகப்பெரிய தப்பு ..!! வெளிப்படையாக சொல்லிய பிரபல நடிகர் ..!!

கேப்டன் விஜயகாந்த் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் ஆவார் . சிறுவயதிலேயே சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் சென்னைக்கு கிளம்பி வந்த விஜயகாந்த் பல வருட போராட்டத்திற்கு பிறகு இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . பின்னர் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

பின்னர் சினிமாவில் கிடைத்த செல்வாக்கை வைத்து அரசியலிலும் களம் இறங்கினார் விஜயகாந்த் . அதிலும் வெற்றி கண்டார் . ஆனால் தற்போது அவருடைய உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்த் நேர்மையாக இருந்ததால்,

தான் இப்படி இருக்கிறார் என்று கூறியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர் . அவர் வேறு யாரும் இல்லை நடிகர் ராதாரவி தான் . அந்த வகையில் ராதாரவியும் விஜயகாந்த் இணைந்து  பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . மேலும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ,

விஜயகாந்தும், ராதாரவியும் நல்ல நண்பர்களாம்.  ஆனால் திடீரென விஜயகாந்த் இடமிருந்து இவர் பிரிந்து விட்டாராம் . ஆனால் அதற்கான காரணம் என்னவென்று இப்போது வரை இவருக்கு தெரியவில்லையாம் . அது மட்டுமல்லாமல் விஜயகாந்தை  பார்க்க கூட விடமாட்டார்கள் என்று,

புலம்பினார் ராதாரவி.  அதோடு விஜி அரசியலில் மிகவும் நேர்மையாக இருந்து விட்டார்.  அப்படி இருந்தால் வேலைக்கு ஆகாது . அதனால் தான் இன்று இப்படி ஒரு நிலைமையில் இருக்கிறார்,  அரசியலில் ரொம்பவும் நேர்மையாக இருக்கக் கூடாது என்று கூறியிருந்தார் ராதாரவி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *