நடிகர் விஜய் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படத்தை முடித்த விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் அண்மை காலமாக அரசியலில் களமிறங்குவதற்காக தீயாக வேலை செய்து கொண்டு வருகிறார் நடிகர் விஜய் .
ஆனால் இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவருக்கு எதிராக பலரும் கொடி பிடித்து வருகின்றனர் . இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத விஜய் உலக பட்டினி தினத்தன்று ஏழைகளுக்கு உணவு வழங்கியது , 10 ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற,
மாணவ , மாணவிகளுக்கு பரிசு வழங்கியது என்று இப்போதே அரசியலுக்கு வருவதற்கு அஸ்திவாரம் போட்டு வருகிறார். இந்நிலையில் விஜய் அந்த விஷயத்தில் பயந்தாங்கோலி அப்படி இருக்கிறப்ப எப்படி இவரால் அதை சமாளிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிரபலம் ஒருவர் அந்த வகையில் சமீபத்தில்,
விஜய் குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியதாவது , பொதுவாகவே விஜய்க்கு கூட்டத்தை பார்த்தாலே பயமாம் . அப்படி அந்த கூட்டத்தில் மாட்டிக் கொண்டால் அங்கு இருந்து எப்படி பாதுகாப்பாக வெளியேறுவது என்று பயத்தில் யோசித்துக் கொண்டே இருப்பாராம் .
அது மட்டுமல்லாமல் ஒரு முறை திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது ரசிகர்களின் கூட்டம் அதிகரித்ததால் சுவர் ஏறி குதித்து விஜய் வீட்டிற்கு வந்த கதையும் உண்டு. அப்படி இருக்கும் போது அரசியலுக்கு வந்ததும் இதை எப்படி சமாளிப்பார் என்று கூறப்படுகிறது…