பொதுவாகவே டி ஆர் பி யில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி சீரியல்கள் மட்டும் தான். அப்படி கடந்த வருடம் இயக்குனர் திரு செல்வம் இயக்கத்தில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் எதிர்நீச்சல் . இந்த சீரியலில் மதுமிதா, கனிகா ,பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மாரிமுத்து, சபரி பிரசாந்த் ,கமலேஷ் ,திருச்செல்வம் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் . இப்படி ஒளிப்பரப்பாகும் சீரியல்,
ரசிகர்களின் பேவரைட் சீரியலாக இருந்து வருகிறது . குறிப்பாக இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இந்த சீரியல் ஹிட்டானதற்கு காரணமே ,
மாரிமுத்து தான். அந்த அளவிற்கு தன்னுடைய வசனத்தால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் மாரிமுத்து. இப்படி இருக்கும் நிலையில் நேற்று திடீரென மாரடைப்பால் மாரிமுத்து இறந்து விட்டார் . இதனால் இனிமேல் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க,
போகிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர் . இந்நிலையில் மாரிமுத்துவின் இடத்தை இவரால் மட்டும்தான் நிரப்ப முடியும் என்று இயக்குனர் திருசெல்வம் முடிவெடுத்துள்ளாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகரும் எ, ழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தான் .
தமிழ் திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த வேல ராமமூர்த்தி மாரிமுத்துவை போல நக்கல் நையாண்டி செய்பவர் . அதனால் அவரையே இந்த சீரியலில் ஏஜிஎஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது…