April 30, 2024

ஊரு கண்ணு பூரா உங்க மேல தான்..!! ” கே பி ஒய் ” பாலாவிற்கு விரல் உடைந்தது ..!! அம்மாவ சுத்தி போட சொல்லுங்க..!!

விஜய் தொலைக்காட்சியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தரமான கலைஞன் தான் கே பி ஒய் பாலா . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் பாலா . குறிப்பாக இவருடைய டைமிங் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.  இதன்பிறகு குக் வித் கோமாளி ,

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை,  காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலக்கினார் பாலா . இதன்பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.  அந்த வகையில் தமிழில் வெளியான தும்பா ,புலிக்குத்தி பாண்டி ,

ஆன்ட்டி இந்தியன், தேஜாவு  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  என்னதான் ஒரு வளர்ந்து வரும் நடிகராக பாலா இருந்தாலும் அவர் செய்யும் உதவிகள் அனைத்தும் ரசிகர்களை பிரமிக்க செய்கிறது . அப்படி இதுவரை மக்களுக்காக மூன்று இலவச,

ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருந்த பாலா , சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக 5 லட்சம் நிதியுதவி கொடுத்திருந்தார் . குறிப்பாக இவரின் செயலுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் .

இப்படி இருக்கும் நிலையில் கையில் கட்டுடன் மனம் நிறைந்தது,  விரல் உடைந்தது என்று பதிவு போட்டு இருக்கிறார் பாலா . இதைப் பார்த்த ரசிகர்கள் கண் திருஷ்டி , ஊரு கண்ணு பூரா உங்க மேல தான்,  அம்மாவ சுத்தி போட சொல்லுங்க என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *