கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு தான் சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர் . மேலும் மிக்ஜாம் புயல் சென்னையையே சூறையாடியது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வர முடியாமல் சென்னை மக்கள் தவித்து வந்தனர். இந்த நேரத்தில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் நிதியுதவியும் , நேரில் சென்று உதவியும் செய்திருந்தனர் . அப்படி விஜய்யின் ரசிகர் மன்றம்,
சார்பில் சென்னை மக்களுக்கு உணவு வழங்கியிருந்தார்கள் . அவருடைய ரசிகர்கள் என்னதான் அவர்கள் உதவி செய்திருந்தாலும் , அதில் விளம்பரம் தேடியது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் சாப்பாடு போடும்போது கூடவே ஒருவர் விஜய் புகைப்படத்தை,
எடுத்துக்கொண்டு சென்றிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . ஆனால் இப்படி விளம்பரம் தேடும் நடிகர்களுக்கு மத்தியில் காதும் காதும் வைத்தபடி 100 மக்களை தன்னுடைய வீட்டில் தங்க வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர். அவர் வேறு யாருமில்லை,
நடிகர் அஜித் தான் . எப்போதும் தான் செய்யும் உதவி வெளியில் தெரியக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் அஜித் . அப்படி சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட மக்களை தன்னுடைய வீட்டிற்குள் மூன்று நாட்கள் வரை தங்க வைத்து,
பார்த்துக் கொண்டாராம் . அது மட்டுமல்லாமல் அவர்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது தலைக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அவர்களை மனம் குளிர செய்திருக்கிறார் நடிகர் அஜித். இந்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…