கீர்த்தி பாண்டியன் ஓர் வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . இவர் 90 களில் கலக்கிய நடிகர் அருண்பாண்டியனின் மகள் ஆவார் . கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை கீர்த்தி பாண்டியன். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அன்பிற்கினியால் ,கண்ணகி போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி பாண்டியன் .
இதை அடுத்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடிக்கும் போது நடிகர் அசோக் செல்வனுடன் காதல் வயப்பட்டார் நடிகை கீர்த்தி பாண்டியன். பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான பிறகும் ,
இருவரும் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி பாண்டியனிடம் , திருமணம் ஆகிவிட்டதால் இனிமேல் தொடர்ந்து நடிப்பீர்களா .? என்று கேள்வி எழுப்பி உள்ளனர் .
அதற்கு பதில் அளித்த கீர்த்தி பாண்டியன் கூறியதாவது, நடிப்பும் ஒரு தொழில்தான். ஏன் இதை கல்யாணம் ஆகிவிட்டால் செய்யக்கூடாதா .? இந்த கேள்வியை உங்களால் அசோக் செல்வனிடம் கேட்க முடியுமா.? கல்யாணமான பிறகும் ஆண்கள் நடிக்கலாம்.
ஆனால் கல்யாணமான பிறகு பெண்கள் நடிக்க கூடாதா.? இதில் என்ன பிரச்சனை இருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார் நடிகை கீர்த்தி பாண்டியன்…