சமீபகாலமாக தமிழ் படங்களில் முத்த காட்சி என்பது சர்வசாதாரணமாகி விட்டது . ஆனால் இந்த விஷயத்தை அப்போதே செய்து காட்டியவர் நடிகர் கமலஹாசன் . அப்படி இவரின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களில் கட்டாயம் நெருக்கமான காட்சி , முத்த காட்சிகள் இடம் பெறும் . இதனாலேயே பல நடிகைகள் இவருடன் நடிப்பதற்கு பயந்தார்கள். அப்படித்தான் முத்த காட்சியில் நடிக்க மறுத்த நடிகையை ,
தூக்கி இ ருக்கிறார் கமல். அவர் வேறு யாரும் இல்லை நடிகை ரேவதி தான் . கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான மண்வாசனை என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரேவதி தொடர்ந்து கைகொடுக்கும் கை ,புதுமை பெண், வைதேகி காத்திருந்தாள்,ஒரு கைதியின் டைரி, கன்னிராசி ,பகல் நிலவு ,
ஆண்பாவம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி இருக்கும் நிலையில் கமலஹாசன் உடன் இணைந்து புன்னகை மன்னன் படத்தில் நடித்திருந்தார் நடிகை ரேவதி. அந்த படத்தில் கமல்ஹாசனின் முதல் காதலியாக நடிகை ரேகா நடித்திருப்பார் .
ஆனால் அந்தப் படத்தில் ரேகா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது ரேவதி தானாம் . பின்னர் இப்படி ஒரு முத்த காட்சி இருப்பதை தெரிந்து கொண்ட ரேவதி நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம் . இதன் பிறகு ரேவதியை தூக்கி விட்டு ரேகாவை அந்த கதாபாத்திரத்தில்,
போட்டு இருக்கிறார் கமல் . பின்னர் இரண்டாவது காதலியாக நடித்திருந்தார் ரேவதி. மேலும் நடிகை ரேவதி ஆரம்பத்திலிருந்து முத்த காட்சிகள் , கிளாமர் காட்சிகள் என்று அந்த அளவிற்கு எதிலும் நடித்தது கிடையாது. அதனால் தான் இப்படி ஒரு காட்சியிலும் நடிக்க மறுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது…