சினிமா உலகில் இருக்கும் நடிகைகள் திருமண வயதை கடந்து தான் திருமணமே செய்து கொள்வார்கள் . ஆனால் ஒரு சில நடிகைகள் திருமணம் என்று சொன்னாலே தெறித்து ஓடி வருகின்றனர் . அந்த வகையில் முதலாவதாக உள்ளவர் நடிகை தபு. தமிழில் வெளியான காதல் தேசம் என்ற படத்தின் மூலமா அறிமுகமானார் தபு .பின்னர் இந்த தொடர்ந்து இருவர் தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்,
சினேகிதியே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இதை தொடர்ந்து பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் நடிகை தபு . ஆனால் 51 வயதாகியும் கூட முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார் நடிகை தபு . இவரை தொடர்ந்து மற்றொருவர் தான் நடிகை கௌசல்யா . 90ஸ் ரசிகர்களுக்கு,
மிகவும் பரிச்சயமான கௌசல்யா காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நேருக்கு நேர் ,பிரியமுடன் சொல்லாமலே, ஆசையில் ஒரு கடிதம் ,வானத்தை போல போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென,
ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . ஆனால் 43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் நடிகை கௌசல்யா . இவரை தொடர்ந்து இன்னொரு நடிகை தான் நக்மா . ஜோதிகாவின் சகோதரியான நக்மா தமிழ் வெளியான பல சூப்பர் ஹிட் படங்களில் ,
நடித்திருக்கிறார். இதை அடுத்து தற்போது அரசியலிலும் களம் இறங்கியுள்ளார் நடிகை நக்மா. ஆனால் இவரும் திருமணம் பேச்சை எடுத்தாலே தெறித்து ஓடுகிறாராம். இவர்களை தொடர்ந்து கிரண், சதா போன்ற பல நடிகைகளும் திருமணம் வயதை கடந்தும் கல்யாணம் ஆகாமல் சுற்றி வருகின்றனர்…