80, 90 கால கட்டங்களில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் காமெடி நடிகர் கவுண்டமணி அவர்கள் . அதுவும் இவரும் செந்திலும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது. அப்படி பல முன்னணி நடிகர்களின் படங்களின் காமெடி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த கவுண்டமணி ராஜ்கிரண் அறிமுகமான ,
என் ராசாவின் மனசிலே படத்திலும் காமெடி நடிகராக நடித்திருந்தார் . பொதுவாகவே நடிகர் ராஜ்கிரணுக்கு சினிமா பின்புலம் இல்லாதவர்களை சினிமாவில் தூக்கி விட வேண்டும் என்ற ஆசை இருந்ததாம் . அப்போதுதான் கவுண்டமணியின் நடவடிக்கை மாறியது .இது அப்போது ராஜ்கிரணுக்கு ,
சுத்தமாக பிடிக்கவில்லையாம் . இதனால் கடுப்பான நடிகர் ராஜ்கிரண் அவருக்கு பதிலாக ஒரு புதிய நகைச்சுவை நடிகரை உருவாக்கலாம் என்று நினைத்து தான் வடிவேலுவை அறிமுகப்படுத்தினாராம் . அப்படி ராஜ்கிரண் ஹீரோவாக நடித்து இயக்கிய அரண்மனை கிளி படத்தில்,
வடிவேலு காமெடியனாக நடித்து பிரபலமானார் . அன்று மட்டும் ராஜ்கிரண் இல்லையென்றால் இன்று வடிவேலுவே கிடையாது . அது மட்டுமல்லாமல் வடிவேலுவை பாட வைத்த பெருமையும் ராஜ்கிரண் அவர்களையே சேரும் .அவர் தான் முதலில் வடிவேலுவை போடா போடா புண்ணாக்கு ,
என்ற பாடலை பாட வைத்திருந்தார் . அப்படி இருந்தும் நாளடைவில் ராஜ்கிரணை வடிவேலு மறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது .இந்த தகவலை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயன்பாடு ரங்கநாதர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…