April 29, 2024

அடுத்த ஜென்மத்தில் ..!! பாம்பாக பிறந்தால் கூட படம் எடுக்க மாட்டேன்..!! சினிமாவிற்கு பெரிய கும்பிடு போட்ட பிரபலம் ..!!

கஞ்சா கருப்பு ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் என்ற படத்தின்  மூலம் துணை நடிகராக அறிமுகமானார் நடிகர் கஞ்சா கருப்பு . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ராம், சிவகாசி ,தாமிரபரணி, பருத்திவீரன், அறை எண் 305ல் கடவுள் ,சுப்ரமணியபுரம் ,களவாணி, போராளி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென  ஒரு தனி இடத்தை ,

பிடித்துக் கொண்டார் நடிகர் கஞ்சா கருப்பு.  இப்படி தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்து வந்த கஞ்சா கருப்புவுக்கு படம் தயாரிக்கும் ஆசை வந்திருக்கிறது.  அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்திருந்தார் கஞ்சா கருப்பு .

குறிப்பாக இந்த படத்திற்காக தன்னிடம் இருந்த எல்லா பணத்தையும் வைத்து தயாரித்திருக்கிறார்.  ஆனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது . இதனால் வீட்டையே விற்கும் அளவிற்கு கடங்காரனாகியிருக்கிறார் கஞ்சா கருப்பு. 

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கஞ்சா கருப்பு கூறியதாவது , நான் அந்தப்படத்தை தயாரித்து மிகப் பெரிய தவறை செய்து விட்டேன் , படத்தின் இயக்குனரும் ஒரு முட்டாள்,அதில் நடித்த நடிகரும் ஒரு முட்டாள், இது தெரியாமல் நான் அந்த படத்தை,

தயாரித்து விட்டேன். இதனால் அடுத்த ஜென்மத்தில் நான் பாம்பாக பிறந்தால் கூட படமே எடுக்க மாட்டேன் என்றும் ,இந்தப் படத்தினால் மிகப்பெரிய கடனாளியாக மாறிவிட்டேன் இப்போது வரை அதை அடைக்க முடியவில்லை என்று புலம்பி இருந்தார் நடிகர் கஞ்சா கருப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *