தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே பல நடிகர்களுடன் ,
கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இருந்தார் . பின்னர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தின் போது விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார். பின்னர் இவர்கள் இருவரும் ஏழு வருடமாக காதலித்து வந்த நிலையில் ,
கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . திருமணமான சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர் விக்கி நயன் ஜோடி . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும்,
ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா கோவிலில் தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் கோவிலுக்குப் போகும்போது கூட கேமரா எடுத்துட்டு தான் போவீங்களா என்று கூறி வருகின்றனர்…