ரம்யா பாண்டியன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். நடிகர் அருண்பாண்டியனின் உறவினர் மகளான ரம்யா பாண்டியன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் தான் . இந்த திரைப்படம் இவருக்கு ,
மிகப் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் , நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் . அதோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி மற்றும்,
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் . இப்படி இருக்கும் நிலையில் சிறுவயதில் இருந்து செடிகள் வளர்ப்பதிலும், மரங்கள் வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்ட ரம்யா பாண்டியன் தற்போது 143 மரக்கன்றுகளை நற்று வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
அந்தப் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன் . அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனுக்கு செடிகள் மீது இவ்வளவு காதல் என்று கூறி வருகின்றனர்…