தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது எதிர்நீச்சல் சீரியல் தான். கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் இப்போது வரை டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து தான் . இவர் பேசும் வசனங்களுக்காகவே ,
இந்த சீரியல் பெரிய அளவில் பிரபலமானது. இதன் பிறகு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சீரியலை பார்க்க தொடங்கினார்கள் . இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் திடீரென இறந்து விட்டார். இதனால் அவருடைய,
இடத்தை மீண்டும் யார் பிடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது. இதனால் அவருடைய பேச்சு வழக்கிலேயே உள்ள நடிகர் வேல ராமமூர்த்தியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்கள் . ஆனால் அவர் முடியாது என்று மறுத்து விட்டாராம் .
இந்நிலையில் தற்போது பிரபல வில்லன் நடிகர் ஒருவர் ஆதி குணசேகரனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அவர் வேறு யாருமில்லை நடிகர் பசுபதி தான். தமிழ் சினிமா உலகில் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்த பசுபதி ,
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் மாரிமுத்துவின் இடத்தை பசுபதியால் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்றும் கூறப்படுகிறது…