வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் போட்டியிடப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதற்காக தற்போது தமிழக முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் முதலாவதாக தன்னுடைய கட்சி நிர்வாகிகளுக்கு நான்கு கண்டிசன் போட்டுள்ளாராம் . அது என்னவென்றால் ஆலோசனைக் கூட்டத்தில் நடக்கும் எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாதாம் . அதோடு ஒவ்வொரு தொகுதியிலும்,
கட்சியைப் பற்றி என்னென்ன பேசுகிறார்கள் என்பதை உடனே தெரிவிக்க வேண்டுமாம் . இதைத்தொடர்ந்து மற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகளும் நம்முடைய கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறார் விஜய் .
இதில் கடைசி கண்டிசனாக தற்போது விஜய் கோட் என்ற படத்தில் நடித்து வருவதால் இந்த படம் முடிந்த பிறகு தான் முழு நேர அரசியலில் களமிறங்க உள்ளாராம். அதுவரை கட்சிக்கும் தன்னுடைய பெயருக்கும் எந்த ஒரு களங்கமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்…